Sunday, June 12, 2011

கேள்வி-பதில் : 3

ன்றைய எனது பதிவில் கேள்விகளை மட்டும்தான் நான் கேட்பதாக உத்தேசம். பதில் நீங்கள் தான் தர வேண்டும்.

உங்களுக்கான கேள்விகள்

1. வாழ்க்கையில ஒரு தடவையாவது உங்க அம்மாக்கு சாப்பாடு ஊட்டி 
   விட்டிருக்கீங்களா? ( விவரம் தெரிஞ்ச வயதிற்கு பின் )

2. ஒரு தடவையாவது வறுமையினால் சாப்பாடு இல்லாமல் அதன் 
   பசியின்    கொடுமையை அனுபவித்திருக்கிறீர்களா?

3. காதலித்த பெண்ணின் அல்லது ஆணின் மரணம் 
   அனுபவித்திருக்கிறீர்களா?

4. வெளியூர் பயணத்தில் , பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன், பணம் 
    அனைத்து திருடனிடம் அல்லது தவறுதலாக இழந்த அனுபவம்  
    உண்டா?

5. வாழ்க்கையில ஒரு தடவையாவது உங்க மனைவிக்குத் தெரியாம 
    சஸ்பென்சாக அவங்க பெற்றோருக்கு புது துணி எடுத்து 
    கொடுத்திருக்கிறீர்களா?

6. காதலனுடன் அல்லது காதலியுடன் இருக்கும் போது பெற்றோர்களிடம் 
   மாட்டியதுண்டா?(உண்மை மட்டும் சொல்லவும்.பொய்னா வேண்டாம்)

7. காதலியிடம் அல்லது காதலனிடம் முதல் முத்தம் அனுபவம் 
   கிடைத்திருக்கிறதா? ( பதில் சொல்றவங்க நிச்சயம் பாராட்டப்பட 
   வேண்டியவங்க. ஏன்னா இட்ஸ்  எ வெரி வெரி பர்சனல் டு எவ்ரி ஒன். 
   ஆண்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள். பெண்கள் பதில் சொல்ல 
   பயப்படுவாங்க-ந்னு நினைக்கிறேன்)

8. அண்ணன்,அக்கா, தங்கை அல்லது தம்பி இவர்கள் ஒரு தடவையாவது 
   உங்களை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்ததுண்டா?

9. வயதான பிச்சைக்காரருக்கு ஒரு தடவையாவது சாப்பாடு வாங்கி
   கொடுத்ததுண்டா?

10. வயது வந்தபின்பு பெற்றோர்கள் உங்களுக்கு செய்த ஏதேனும் ஒரு
     செயலை நினைத்து ஆனந்தப்பட்டு, அவர்கள் முன் அழுதிருக்கீறீர்களா?
    அல்லது முழு சந்தோசத்தை அனுபவித்திருக்கீர்களா? ( பெண்கள் 
    நிச்சயம்     அழுதிருப்பர். ஆண்கள் கஷ்டம்தான்)

மேற்கண்ட இந்த பத்து கேள்விகளில் உங்க பதிலை ஆம்/இல்லை என்ற வகையில் சொன்னால் பொதும் அல்லது விளக்கி சொன்னால் மற்றவங்களும் உங்களையும் ,உங்க உணர்வுகளையும் புரிஞ்சுக்குவாங்க.

முதல்ல என்னோட பதிலை எழுதறேன்.ஒவ்வொரு கேள்விக்கும் என்னோட பதில்:

1. இல்லை.
2. ஆம். ஒரே ஒரு தடவை காசில்லாம அனுபவிச்சேன்.
3. இல்லை
4. ஆம்.(ஒரு மனிதர்தான் கடவுள் உருவில் காப்பாற்றினார்)
5. இல்லை.
6. இல்லை
7. ஆம்.( அதெல்லாம் சொர்க்கம்பா! )
8. ஆம்
9. ஆம்
10. இல்லை.


இந்த கேள்விகளில்,

1-ம்கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிச்சயம் நீங்கள் உங்க அம்மாவிற்கு ஒரு பாசமுள்ள நேசமுள்ள மகன்/மகள்.

1-ம் கேள்விக்கான பதில் இல்லை என்றால் முதலில் அத செய்து பாருங்க உங்க அம்மா நிச்சயம் மனதார சந்தோசப்படுவாங்க. நம்மள பெத்தவங்களுக்கு  இது கூட செய்யலீன்ன எப்படி?

2-ம் கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிச்சயம் நீங்கள் வாழ்க்கையில இப்ப நல்ல நிலைமைல இருப்பீங்கன்னு நம்பறேன்.

2-ம் கேள்விக்கான பதில் இல்லை என்றால் நிச்சயம் உங்க பெற்றோர் செய்த புண்ணியம்தான்.

5-ம் கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிச்சயம் நீங்கள் உங்க மாமனார், மாமியாருக்கு நீங்க ஒரு புள்ள மாதிரி. உங்க மனைவி உங்க மேல் உயிரையே வச்சிருக்காங்க.

5-ம் கேள்விக்கான பதில் இல்லை என்றால் முதலில் அத செய்து பாருங்க. உங்க மனைவியின் மனதில் நீங்க மகராசன்தான்.

8-ம் கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிச்சயம் நீங்கள், உண்மையிலேயே பாசமான சகோதரன்/சகோதரி.

8-ம் கேள்விக்கான பதில் இல்லை என்றால் யதார்த்த உலக வாழ்க்கையில் தான் வாழ்கிறீர்கள்.

10-ம் கேள்விக்கான பதில் ஆம் என்றால் நிச்சயம் உங்கள் பெற்றோர் உங்களுக்கு கிடைச்சது புண்ணியம் தான். சந்தோசப்படுங்க.

10-ம் கேள்விக்கான பதில் இல்லை என்றால் உங்களுக்கும் பெற்றோர்க்கும் இடையில் பாசம் கொஞ்சம்தான் இருக்கு. நடுவுல என்னமோ இருக்கு.
(மற்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ். Sorry.)

இனி உங்க பதிலை type பண்ணுங்க..

*****************************************************************

11 comments:

இராஜராஜேஸ்வரி said...

சுட்டி கொடுத்தமைக்கு நன்றி. எந்தக் கேள்விக்கும் பதில் தெரியாது.

ம.தி.சுதா said...

1. இல்லை
2. பல தடவை
3.
4. ஆம்
5. மணமாகலை
6. இல்லை
7. இல்லை
8. ஆம்
9. ஆம்
10. இல்லை

சக்தி கல்வி மையம் said...

அட இது வேறையா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த கேள்விகளுக்கு பதில் சொன்னா என்ன தருவிங்க...??

சக்தி கல்வி மையம் said...

1.இல்லை
2.இல்லை
3.இல்லை
4.இல்லை
5.இல்லை
6.இல்லை
7.ஆம்
8.ஆம்
9.ஆம்
10.இன்னும் வயசாகவில்லை

மாலதி said...

1. இல்லை
2. பல தடவை
3.
4. ஆம்
5. மணமாகலை
6. இல்லை
7. இல்லை
8. ஆம்
9. ஆம்
10. இல்லை

கவி அழகன் said...

1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Thenammai Lakshmanan said...

ஒன்றிரண்டு நடந்திருக்கு.. ஆனா நிறைய நடக்கலை..:( குணா..

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதொரு கருத்துக்கணிப்பு. எல்லாமே சரியாகத்தான் வடிவமைத்துள்ளீர்கள்.

Anonymous said...

1.தாய்ப்பாசம் இதுவரை கிடைக்கவில்லை
2.பசியால் வாடியதுண்டு வறுமையால் இல்லை
3.அந்த காதலே மரணித்ததால் வலி அறிவேன்
4.இல்லை
5.அவருக்கு சஸ்பென்ஸா அவரோட அம்மாவுக்கு வாங்கி கொடுத்தனுப்பி இருக்கேன்.
6.இல்லை
7.உண்டு உயிர்க் கொண்ட அந்த நிமிடம் மறக்க இயலாது.
8.உண்டு
9.உண்டு
10.உண்டு

Unknown said...

very nice question

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...