Monday, June 06, 2011

எ.பி.க - 3


நான் படித்து , ரசித்த சில கவிதைகள் மற்றும் ஹைகூ வகை கவிதைகளை இங்கு வெளியிட்டுள்ளேன் உங்களுக்கும் பிடிக்கும் என்ற எண்ணத்தில்....

படித்து விட்டு சொல்லுங்கள்...

 எ.பி.க - 1



குழந்தை அழும்போதெல்லாம்
நான் குதிரை ஆக
வேண்டியிருக்கிறது.
இம்மண்ணில்
என்னைச் சவாரியாக்கி
கைகொட்டி சிரிக்க,
குழந்தைக்குமா ஆனந்தம்?


எ.பி.க - 2



பித்தளைச் சட்டிகளுக்குப்
புளிச்சக்கை
சில்வர் தட்டுக்களுக்கு
விம் பவுடர்
வெள்ளிப் பாத்திரங்களுக்கு
விபூதி மட்டும்
பளபளவென
விளக்கிவைக்கும்
அம்மாவால்
கடைசிவரை
விளக்கவே முடியவில்லை
அப்பாவிடம் தன் மனசை!


எ.பி.ஹை - 1



குழந்தையின் வளையல்
குமரிப் பெண்ணின் காதில்.


எ.பி.ஹை - 2



ந்தை இரைச்சலிலும்
தனியாய்க் கேட்கிறது
(அவளின்)
வளையோசை!



*****************************************************

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...