Tuesday, February 28, 2012

மற்றவை - பாடல் விமர்சனம்

துவரை நிறைய சினிமா படங்களுக்கு விமர்சனம் எழுதிவிட்டேன். ஆனால் ஒரு முறை கூட, பாடலுக்கு விமர்சனம் எழுதவில்லை. அதனால் இந்தப் பதிவின் மூலம் பாடலுக்கும் விமர்சனம் எழுதும் வழக்கத்தை ஆரம்பிக்கின்றேன்.

எதேச்சையாக நான் யுவனின் இசையில் வெளியான "கழுகு" படத்தின் பாடல்களைக் கேட்டேன். அதனைப் பற்றிய விமர்சனம் இங்கே.

"கழுகு" படத்தின் பாடல்களைக் கேட்ட போது, மங்காத்தா-விற்கப்புறம்  யுவனுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் அமைந்தது இதுவாகத்தான் இருக்கும் என்று தோனியது.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள்.

1. "ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்" என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலை சத்யன், கிருஷ்ணராஜ், வேல்முருகன் பாடியுள்ளனர். சினேகன் எழுதியிருக்கிறார்.

இன்றைய நாகரீக உலகில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான காதல் எப்படிப்பட்டது என்பதை அன்றைய காதலுடன் வேறுபடுத்தி, மிகச் சாதாரண வரிகளைப் போட்டு, சினேகன் எழுதியிருக்கிறார். வரிகள் ஒவ்வொன்றும் ஷார்ப்பாக இருக்கிறது. ஃபோக்(Folk) சாயலில் இருக்கும் இந்தப் பாட்டு கேட்பதற்கும் நன்றாக உள்ளது.

அனேகமாக படம் வெளியாகும் சமயம் இந்தப் பாடல் அனைத்துச் சேனல்களிலும் தினமும் காட்டப்படலாம். கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் பாட்டு நிச்சயம் இன்னொரு "வாரணம் ஆயிரம்-அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல" போல இருக்கும்.

பாடல் வரிகள்:

[பல்லவி]
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்,
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்...
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்,
அது எப்போதுமே போதையான நெலவரம்... (2)

அப்போ ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்துச்சு,
அது காதலிலே ஒலகத்தையே மறந்துச்சு...
அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும்
அது பிரிஞ்சதேயில்ல.. அது மறஞ்சேதேயில்ல...
தெனம் ஜோடி ஜோடியா இங்க செத்து கிடக்கும்டா
அத தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா..


[சரணம்]
நீ சொல்லும் காதல் எல்லாம் மலையேறிப் போச்சு செத்து
தும்மல போல வந்து போகுது இந்த காதலு...
காதலுன்னு சொல்லுறாங்க கண்டபடி சுத்துராங்க,
டப்பு குறைஞ்சா மப்பு குறைஞ்சா தள்ளி போறாங்க..

காதல் எல்லாமே ஒரு கண்ணாமுச்சி,
இதில் ஆணும் பெண்ணுமே தெனம் காணாபோச்சு
காதலிலே தற்கொலைகள் குறைஞ்சே போச்சி..
அட உண்மை காதலே இல்ல சித்தப்பு,
இங்க ஒருத்தன் சாவுரான் ஆனா ஒருத்தன் வாழுரான்..
அட என்னடா உலகம் இதில் எத்தனை கலகம்
இங்க காதலே பாவம் இது யார் விட்ட சாபம்...


[பல்லவி]
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்,
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்...


[சரணம்]
இன்னைக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடுச்சி,
கண்ணப்பாக்குது கைய கோர்க்குது ரூமு கேட்குது...
எல்லாம் முடிந்த பின்னும் ஃபிரண்டுனு சொல்லிகிட்டு
வாழுறவுங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா..
இப்ப காதல் தோத்துடா யாரும் சாவதே இல்ல
அடப் பொண்ணு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள
இப்பெல்லாம் தேவதாசு எவனும் இல்ல

அவன் பொழுது போக்குக்கு ஒரு ஃபிகரப் பாக்குறான்..
அவ செலவு பண்ணதான் ஒரு லூசு தேடுறா..
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறான்
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியுறான்
(2)

MP3 ஆடியோ:

        


Download Mp3 Link:

http://66.151.148.5/files/55228753_B5Fw3_a548/Aambalaikum%20Pombalaikum%20-%20TamilWire.com.mp3

2. "ஆத்தாடி மனசுதான்" -இந்தப் பாடலை கார்த்திக் ராஜா ஒருமுறையும், பிரியா ஹிமேஸ்-ம் ஒருமுறையும் பாடியுள்ளனர்.

அருமையான சூத்திங்க்(Soothing) மெலடி. கார்த்திக் ராஜாவின் குரலில் கேட்கும் போது, "பருத்திவீரன்-அறியாத வயசு" என் ஞாபகத்திற்கு வந்தது. பிரியாவின் குரலிலும் கேட்பதற்கு இதமான மெலடியாக இருந்தது. நா.முத்துகுமார் எழுதியிருக்கிறார்.

பாடல் வரிகள்:

[பல்லவி]
ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது..
அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே
அடடா இந்த மனசுதான் சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்த கொலுசுதான் தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே...

ஆத்தாடி மனசுதான் ரெக்ககட்டி பறக்குது
ஆனாலும் வயசுதான் கிட்ட வர தயங்குது


[பல்லவி]
கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்ட தொட்ட கண்ணு வேர்த்து போகும்
மூச்சே காய்ச்சலா மாறும்
விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
மனசே மார்கழி மாசம்
அருகில் உந்தன் பாசம்
இந்த காதில் வீசுது
விழி தெருவில் பார்க்கும் உனை
உறவை தேடுது
பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
என்ன கொன்னாலும் ஒப்பாது உன் பேர சொல்வேன்டா ( ஆத்தாடி...)


[பல்லவி]
ஒன்ன ரெண்டா என்ன நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள,
பேச தைரியம் இல்ல
உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் என்ன முட்டி முட்டித் தள்ள
இருந்தும் வெட்கத்தில் செல்ல...

காலம் முழுதும் நாளும்,
உன்ன பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் உந்தன்
மடியில் சாய்ந்தே ஆகனும்
உன்ன தவிர என்ன வேணும்,
வேற என்ன கேட்க தோணும்
நெஞ்சம் உன்னோட வழாம
மண்ணோடு சாயாதடா...


MP3 ஆடியோ:
கார்த்திக் ராஜாவின் குரலில்.

       

Download Mp3 Link:

http://66.151.148.5/files/55229304_BMYMw_80e0/Aathadi%20Manasudhan%20II%20-%20TamilWire.com.mp3

பிரியாவின் குரலில்..

     

Download Mp3 Link:

http://66.151.148.5/files/55229016_fHx8i_aa20/Aathadi%20Manasudhan%20-%20TamilWire.com.mp3

3. "பாதகத்தி" யுவனின் குரலில் இன்னுமொரு மெலடியாக இது உள்ளது. கேட்கலாம். ட்யூன் வித்தியாசமாக உள்ளது. சினேகன் எழுதியிருக்கிறார்.

MP3 ஆடியோ:

     

Download Mp3 Link:

http://66.151.148.5/files/55228722_paRdT_1ae6/Paathagathi%20Kannupattu%20-%20TamilWire.com.mp3


4. "வாடி வாடி" - புஷ்பவனம் குப்புசாமி,அனிதா பாடிய இந்தப் பாட்டும் ஃபோக்(Folk) ஸ்டைலில் உள்ளது. கேட்கலாம். சினேகன் எழுதியிருக்கிறார்.

MP3 ஆடியோ:

      

Download Mp3 Link:

http://66.151.148.5/files/55229275_Xnmid_74e7/Vaadi%20Vaadi%20-%20TamilWire.com.mp3


###############################################################


6 comments:

RAMA RAVI (RAMVI) said...

பாடல் விமர்சனம் அருமை.

//இந்தப் பதிவின் மூலம் பாடலுக்கும் விமர்சனம் எழுதும் வழக்கத்தை ஆரம்பிக்கின்றேன்.//

வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுதுங்க.

மதுரை அழகு said...

வெறும் விமர்சனத்தோட இல்லாமல் ஆடியோ லிங்கைக் கொடுத்ததற்கு நன்றி!

deepak said...

குணா அவர்களே, பாடல் விமர்ச்சனம் நன்றாக உள்ளது. எனினும் தாங்கள் இதி போடும் effort , பிறவற்றில் செழுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரு பாடல் விமர்சனம் செய்வதற்கு 10 FM station உள்ளது. மக்களும் ஒரே ஸ்டேஷன் இ கேட்பது இல்லை. So இந்த effort ஐ வேறு எதிலாவது போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் விமர்சனம் அருமை !

N.H. Narasimma Prasad said...

கழுகு படத்தின் பாடல்களை பற்றிய விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...