Tuesday, February 21, 2012

தெரிஞ்சுக்கோங்க - மின்மினிப்பூச்சி : சில விசயங்கள்


மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.

 

மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை

மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி ? 


 
இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை.

மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

 

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

###################################################################
விண்டோசில் போல்டர்களை வெவ்வேறு நிறங்களில் அழகாக மாற்ற:
விண்டோசில் போல்டர்களை இனி உங்கள் வசதிற்கேற்ப வித விதமான கலர்களில் மாற்றிக் கொள்ளலாம்.

அதற்கு கீழே தரப்பட்டிருக்கும் லிங்கை க்ளிக் செய்து அதில் தரப்பட்டிருக்கும் வழிமுறைகளை செய்யவும்.

நான் எனது விண்டோஸ் போல்டர்களின் கலர்களை மாற்றி விட்டேன். பார்க்கவும் அழகாக இருக்கிறது.  நீங்களும் முயற்சி செய்து பாருங்க..

###################################################################

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

மின்மினியாய் ஒளிரும் அழகிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

N.H. Narasimma Prasad said...

மின்மினி பூச்சிகள் பற்றி தகவல்கள் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல் பகிர்வு ! நன்றி நண்பரே !

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...