Sunday, August 21, 2011

கேள்வி - பதில் : 8

                     * கேள்வி - பதில் : 8 *

1. கேள்வி : நாம் குடிக்கும் கோக், பெப்சி, ஸ்லைஸ் மற்றும் இதர கூல் டிரிங்ஸ் எல்லாம் வெவ்வேறு கலரில் இருக்கின்றன. அது போன்ற கூல் டிரிங்ஸ்-ஐ குடித்தாலும் யூரின் கலர் மட்டும் கலர்லெஸ்(Colourless) ஆக இருக்கிறதே? என்ன காரணம்?
[சுரேஷ் கிரிம்,ஜப்பான்]


பதில் :
சுரேஷ் , நீங்க சொல்றது மாதிரி யூரின் கலர் கலர்லெஸ் கிடையாது. அதற்கு நிறைய கலர் இருக்கிறது. பொதுவாக யூரின்-க்கு ஒயிட், ரெட், ஆரஞ்சு, ப்ளாக், கிரீன், ப்ளூ , க்ரே, பிரவுன் அல்லது கோக் கலர் உண்டு. யூரினுக்கு கலர் கொடுப்பவை " யூரோக்ரோம், யூரோஎரித்ரின் மற்றும் யூரோபிலின் " என்னும் பிக்மெண்ட்ஸ் தான். இத்தனை கலர்களில் யூரின் தோன்றுவதன் காரணம் நாம் அருந்தும் திரவ, திட வகை உணவுகளாலும், சிறு நீரகத்தின் வேலையாளும். எடுத்துக்காட்டாக நிறைய தண்ணீர் குடித்தால் , வெளி வரும் யூரின் கலர் ஒயிட். ஏதாவது மெடிகேஷன் எடுத்திருந்தாலோ அல்லது தண்ணீர் குறைவாக குடித்தாலோ வெளி வரும் யூரின் கலர் லைட் ஆரஞ்சு. இது நார்மல் கலர்தான். இந்தக் கலரில் வெளி வந்தால் உடல் நிலை நார்மலாக இருப்பதாக அர்த்தம். வேறு கலரில் இருந்தால் நிச்சயம் உடலிலோ அல்லது சிறுநீரகத்திலோ ஏதாவது கோளாறு இருக்கும். அவசியம் டாக்டரைப் பார்க்க வேண்டும்.

2. முதன் முதலில் சேலையை நெய்து உருவாக்கியவர் யார்? சரித்திரம் பார்த்துக் கூறவும்?
[மதுவந்தி, ஈரோடு]


பதில் : 4500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரீகத்தில்தான் முக்கியமான இரண்டு விசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள் பருத்தி,கரும்பு.  மேலும் இன்று உலகமெங்கும் எல்லாரும் டிரஸ் அணிந்து கொண்டு ஸ்வீட் சாப்பிடுவதற்கு இந்தியர்கள்தான் காரணம். மொகஞ்சதாரோ பெண்கள் எடுத்த எடுப்பில் பருத்தியால் ஆன ' மினி ஸ்கர்ட்' டே தயாரித்து அணிந்து கொண்டார்கள். பிறகுதான் சேலை வந்தது..!

3. கேள்வி : மனிதன் தன் மூளையை அதிக பட்சம் 10% தான் உபயோகிக்கிறானாமே?! அப்படியா?
[அறிவழகன்,கரூர்]

 


பதில் : அப்படியும் சொல்ல முடியாது. எல்லா பகுதியிலும் கொஞ்சம் கொஞ்சம் உபயோகிக்கிறோம் என்பதுதான் உண்மை!. காமம்,மத, ஜாதி வெறியெல்லாம் கிளம்பும்போது மட்டும் மூளையின் எல்லாப் பகுதிகளும் வேலை செய்வது நின்று போய், ஆழத்தில் Limbic ஏரியாவில் இருக்கும் Reptile என்ற பகுதி மட்டும் வேலை செய்யும்..!

4. கேள்வி : பைபிளின் கூற்றுப்படி, ஆதாம்-ஏவாளுக்குப் பின் அவர்களது குழந்தைகள் நிச்சயமாக சகோதர, சகோதரிகளாக இருப்பர். அப்படி இருக்கையில் புதிய தலைமுறைகள் எப்படி இவ்வுலகில் தோன்றியிருக்கும்?தயவு செய்து பதிலளிக்கவும்?
[ரமேஷ், கோவை]



பதில் :  அப்படிப் பார்த்தால் ஆதாமின் விலா எலும்பிலிருந்து உருவான ஏவாள் , ஆதாமின் மகள் என்று சொல்லலாமா?! 'சகோதர சகோதரிகளெல்லாம், மனிதப் பரிணாம வளர்ச்சியில் ரொம்பப் பிற்பாடு வந்த உறவு முறைகள்!

5. கேள்வி : ஓவரா சீன் போடறதுன்னா என்ன? கதையாக சொல்லுங்க.
[கீதா, கோவை]

 

பதில் :
ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல்  நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு  இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு  நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான்,  குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் திருடன் ஓடிவிட்டான். சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. " கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கே "- ன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான். இதனால நான் சொல்றது என்னன்னா, ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோ அதைமட்டும்தான் செய்யனும். ஓவரா சீன்  போட்டா இப்படித்தான்.


********************************************************

Saturday, August 20, 2011

மற்றவை - விமர்சனம் : Final Destination 5

       * விமர்சனம் : Final Destination  5 *

Director: Steven Quale

Cast: Nicholas D'Agosto, Emma Bell, Miles Fisher



தற்கு முன் வெளி வந்த Final Destination 1,2,3 & 4 அனைத்து பார்ட்களையும் நான் பார்த்திருக்கிறேன். சில காட்சிகளைக் கண்டு மிரண்டிருக்கிறேன். இந்த 5-ம் பார்ட்டைப் பார்த்து முன்னை விட மிரண்டு விட்டேன்(நிறைய காட்சிகளில்). காரணம் இந்தப் பார்ட்  3D -ல் வெளி வந்திருக்கிறது(+ஆங்கில சப்-டைட்டில்).


நான் பார்த்தது 3D-ஆங்கிலத்தில். நாவலூர் AGS-ல் பார்த்தேன். தியேட்டரின் கட்டமைப்பு அருமையாக உள்ளது. A.C. இருந்தும் குளிர்ச்சியாக இல்லை. குளிர்ச்சி குறைவாகவே இருந்தது. சத்யம், சங்கம் போன்ற தியேட்டரில் இருக்கும் A.C.-ல் உடல் சில்லித்து விடும். AGS நிர்வாகம் சரி செய்வார்களா? அடுத்த முறை  பார்க்கலாம். சரி படத்திற்குப் போவோம்.

படத்தின் கதை:


முந்தைய பார்ட்களில் வந்த கதை போலத்தான் இதிலும். இந்த பார்ட்டில் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களுக்கும் மற்றும் அவர்களின் கேர்ள் பிரண்டுகளுக்கும் மரணம் எப்படி நிகழ்கிறது என்பதை மிரள வைக்கும் விஷுவல் ட்ரீட் - ஐ 3D-ல் காட்டியிருக்கிறார்கள்.


படத்தின் முதல் காட்சியில் நண்பர்களும், கேர்ள் பிரண்டுகளும் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள். ஒரு மிக உயரமான பாலத்தின் மீது பயணம் செய்து கொண்டிருக்கும் போது, நண்பர்களில் ஒருவன் பாலம் இடிந்து விழுந்து ஒவ்வொருவராக இறப்பது போல் கனவு காண்கிறான். அதனால் எச்சரிக்கை செய்து , பஸ்ஸிலிருந்து இறங்கச் செய்து தன் சகாக்களை காப்பாற்றி விடுகிறான். அதற்கப்புறம் கனவில் கண்ட விபத்தில் வரிசையாக இறந்தவர்களுக்கு எல்லாம், அதே வரிசை முறையில் ஒவ்வொரு நபர்களுக்கும் மரணம் ஏற்படுகிறது. மரணத்திற்கு முன்னரே ஒருவர் வந்து கெட்டது நடக்கப் போகிறது என்று எச்சரிக்கை கூட செய்கிறார். முதல் இரண்டு மரணம் நிகழ்ந்த பின்னர் மற்றவர்களுக்கு " அடுத்தது நான் தான் என்ற " மரண பயம் ஒட்டிக் கொள்கிறது. ஆனால் அடுத்து தனக்கு நிகழும் மரணத்தை  மற்றவர்க்கு ஏற்படுத்தி விட்டால் தான் உயிர் வாழலாம் என்ற எண்ணம் ஒருவனுக்கு ஏற்படுகிறது. அதனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சக நண்பனை கொல்ல முயற்சி செய்கிறான் .இறுதியில் அனைவரும் இறந்து விடுகின்றனர்.


இந்தப் படத்தில் ஜிம்னாஸ்டிக், அக்குப்பஞ்சர், ஜன்னலில் இருந்து விழுதல், மெஷின் ஷாப் விபத்து, LASIK சர்ஜரி ஸ்டாண்ட் மற்றும் நெருப்பு+,விமானம் வெடித்தல் போன்ற முறைகளில் ஒவ்வொருவருக்கும் மரணம் நிகழ்கிறது.


படத்தின் முதல் காட்சியில்(15 நிமிடங்கள்) வரும் அந்த மிக மிக உயர்ந்த பாலத்தில் நடக்கும் காட்சிகள் நிச்சயம் மிரள வைக்கும். அதுவும் 3D-ல் பார்த்த போது அப்பப்பா அவ்வளவு அமர்க்களமான விஷுவல் ட்ரீட். அதற்கப்புறம்  ஜிம்னாஸ்டிக் மூலம் நிகழும் மரணம்.  அதற்கப்புறம் வரும் LASIK சர்ஜரி ஸ்டாண்ட் , மெஷின் ஷாப் விபத்து மற்றும் கடைசி காட்சி இவையனைத்தும் நிச்சயம் மிரள வைக்கும். அருமையான காட்சியமைப்பு.

படம் பார்ப்பவர் நிச்சயம் பயப்படும் இடங்கள் கம்பிகள் வந்து ஒருவனின் உடலைக் கிழித்து வெளிவரும் காட்சி, ஒருத்தியின் கண் தெறித்து விழும் காட்சி. திடீரென்று நம் கண்ணை நோக்கி கூர்மையான கம்பிகள் , கத்திகள் வந்து விழும்.  கண்ணாடியைக் கழட்டிப் அனைவரின் ரியாக்ஸன்சைப் பார்க்கும் போது கொஞ்சம் காமெடியாக இருந்தது. இந்தப் படத்தின் முழு திரில்லரை அனுபவிக்கவேண்டுமானால் அவசியம் 3D-ல்தான் பார்க்க வேண்டும். படம் முடியும் போது முந்தைய பார்ட்களின் சில காட்சிகளையும் 3D-ல் காட்டுகின்றனர்.

இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.

* Final Destination  5 - Fantastic thriller *


****************************************************

மற்றவை - மூன்று விசயங்கள்.

                    * மூன்று விசயங்கள் *

இந்தியா ஏழை நாடா?

" இந்தியா ஒரு ஏழை நாடு என்று யார் சொன்னது?. உங்களுக்கு தெரியுமா? எத்தனை இந்தியர்கள் எங்கள் சுவிஸ் பேங்கில் மில்லியன் டாலர் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர் என்று? இனிமேல் இந்தியா ஒரு ஏழை நாடு என்று சொல்லாதீர்கள்". 
 
இந்த வார்த்தைகள் சுவிஸ் பேங்கில் பணி புரியும் ஒரு அதிகாரி சொன்னது. அவர் சொன்னதும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  இருப்பினும் இன்னும் இந்தியர்கள் ஏழைகளாக இருக்க என்ன காரணம். யோசித்துப் பார்த்தால் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
 
" முதலாளிகள் எல்லாம் நாளுக்கு நாள் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எவ்வளவு லாபம் ஈட்டினாலும் , பெரும்பான்மை முதலாளிகள் அதில் சிறிதும் கூட தொழிலாளிகளுக்கு தருவதில்லை. ஏன் சம்பளத்தை அதிகரிப்பதற்கு கூட யோசித்து, கடைசியில் சிறிதளவே அதிகப்படுத்திக் கொடுக்கின்றனர். அந்தப் பணமும் இன்றைய விலைவாசி ஏற்றத்தினால் தேவைகளுக்கே செலவாகிவிடுகிறது.  விலைவாசிக்கேற்ற சம்பளம் இல்லாததால்தான் இன்னமும் நடுத்தர மக்களும், அதற்கு கீழே உள்ள மக்களும் பொருளாதார ரீதியாக முன்னேற முடியவில்லை."


ஏழ்மையைப் பற்றிய ஒரு குறும் படம்

ரண்டு ஏழைச் சிறுவர்களின் தன்னம்பிக்கையில் அவர்களின் வாழ்வு மேம்படுவதை மிக அழகான திரைக்கதையில் "ரோட் சைட் அம்பானிஸ்" என்ற  குறும்படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்த விசயங்கள்;

அந்த இரண்டு சிறுவர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு.
 
எனது கருத்து:

அந்தக் கிரிக்கெட் காட்சிகளை இயக்குனர் இன்னும் யோசித்து எடுத்திருக்கலாம்.  மற்றபடி பார்க்கத்தகுந்த படம்தான்.



அம்மா செய்வது சரியா?

மிழக முதல்வர் அம்மா அவர்கள், கலைஞர் ஆட்சியில் கட்டிய புதிய தலைமை செயலகத்தை டெல்லியில் உள்ள Aim மருத்துவமனை போன்று
சிறப்பான வகையில் நவீன மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த அறிவிப்பை பற்றிய எனது கேள்விகள்.

இடப்பற்றாக்குறை காரணமாகத்தான் புதிய தலைமை செயலகத்தை கலைஞர் கட்டினார். இப்போது பழைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக் குறை இல்லையா? அதற்கு அம்மா என்ன செய்யப் போகிறார்? மக்கள் வரிப்பணத்தில் இவரும் தன் பங்குக்கு ஏதாவது ஒரு கட்டிடம் கட்டுவாரா?

இப்போது அழகாகக் காட்சியளிக்கும் புதிய தலைமை செயலகம் மருத்துவமனையாக மாற்றியதும், மெயிண்டெனஸில்  எப்படி இருக்கப் போகிறது. அரசு மருத்துவமனைப் போல் மாறிவிடுமா? அப்படி மாறினால் கலைஞரின் மனம் என்ன யோசிக்கும்?

சென்ற முறை அம்மா ஆட்சியில், காலில் விழும் கலாச்சாரத்தை தமிழக மந்திரிகளுக்கு பழக்கப் படுத்தியவர், இப்போது அந்தப் பழக்கத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். இது நிச்சயம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. மேலும் சென்ற கலைஞர் ஆட்சியில் இருந்த பவர் கட் இப்போது நிறைய ஊர்களில் குறைந்திருக்கிறது. இதனையும் பாராட்டத்தான் வேண்டும். இருப்பினும் இந்தச் தலைமை செயலகம் விசயத்தில்  அம்மா ஏன் இப்படிச் செய்கிறார்? இன்னும் என்னென்ன செய்வார்?பார்க்கலாம்..

********************************************************

Tuesday, August 16, 2011

எனது படைப்புகள் - 12: சமத்துவம்

                                * சமத்துவம்  *


அலுவலகத்தில் மேலாளராய்

இருப்பவள்..,

தனக்கு கீழ் வேலை பார்ப்பவரையும்

சமத்துவம் பேசி

இருக்கையில் அமர்ந்து

பேசச் சொல்பவள்..!

இன்று அவளின் வீட்டினுள்

அனைவரின் முன்னிலையில்

எழுந்து நின்று கொண்டிருக்கிறாள்

பெண் பார்க்கும் படலத்தில்..,
இதுதான் சமத்துவமோ?!! 

********************************************************



Monday, August 15, 2011

தெரிஞ்சுக்கோங்க - சிந்தனை செய் மனமே

             *  சிந்தனை செய் மனமே *

காங்கிரஸின் அடக்குமுறை அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு டெல்லி போலீசார், கடுமையான 22 நிபந்தனைகளை விதித்திருக்கின்றனர். அதில் 6 நிபந்தனைகளை அன்னா ஹசாரேவின் தரப்பு ஏற்கவில்லை. 5000 பேருக்கு மேல் உண்ணாவிரதம்  இருக்கும் இடத்தில் கூடக் கூடாது. 3 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம்  நடத்த வேண்டும் இரவு 9 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது. இது போன்ற நிபந்தனைகள் அந்த 6-ல் அடக்கம். டெல்லி போலிஸார் எல்லாம் ஏன் இப்படி செய்கிறார்கள்? யாருக்காக  அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போகிறார்? நமக்காகத்தானே.!.மக்களுக்காகத்தானே.!.
 

சராசரி மக்களில் ஒருவர்கள்தானே அவர்களும்;ஏன் இப்படி செய்கிறார்கள்? அது சரி எய்தவன் இருக்க அம்பை நோவானேன். வெள்ளையர்களிடம் வாங்கிய சுதந்திரம் இன்று அரசியல் அதிகார வர்க்கத்தினரின் கையில் தானே இருக்கிறது. ஆகஸ்டு மாதத்திற்குள் லோக் பால் மசோதாவை கொண்டு வர ஏற்பாடு செய்வோம் என்று சென்ற முறை பிரதமர் தரப்பில் கொடுத்த வாக்குறுதி இப்போது என்ன ஆயிற்று. இதுதான் ஜனநாயக ஆட்சிமுறையா? அடக்க அடக்க , தறிக் கெட்டு ஓடும் என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியாதா? இந்த விசயத்தில் ஏன் பயப்படுகிறது?

தனது எண்ணத்தை காங்கிரஸ் கட்சி மாற்றிக் கொண்டு லோக்பால் மசோதாவினை நிறைவேற்றினால் மக்களிடத்தில் கொஞ்சம் நல்ல பேரை வாங்கலாம். இல்லையேல் தி.மு.க வின் நிலைதான்.

###################################################
              * கேட்டால் கிடைக்கும் *

ங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் பாக்கெட்டுக்குள் கைவிட்டு உங்கள் பணத்தை நூதன முறையில் அபகரிக்கும் அநியாயம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை எதிர்த்து நம் உரிமையை நாம் கேட்டுப் பெறும் வகையில், வலைப்பூவின் சீனியர்கள் சுரேகா சுந்தர் மற்றும் கேபிள் சங்கர் என்று செல்லமாக அழைக்கப் படும் சங்கர் நாராயண் அவர்களும் ஃபேஸ் புக்கில் ஒரு கம்யூனிட்டியை ஆரம்பித்துள்ளார்கள். அதுதான் " கேட்டால் கிடைக்கும்" . நமது உரிமையை விட்டுக் கொடுக்காமல், நாம் கேட்டுப் பெறுவதுதான் இந்த கம்யூனிட்டியின் நோக்கம். அதன் ஃபேஸ் புக் லிங்க் இதுதான் .

http://www.facebook.com/groups/249616055063292/


தற்போது நிறைய நண்பர்கள் இதில் உறுப்பினர்களாகக் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர ஆரம்பித்துள்ளனர். உதாரணத்திற்கு சிலவற்றை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.

அனுபவம் 1:
 

 
சுரேகா சுந்தர்:

" திருச்சியிலிருந்து ஓசூர் செல்லவேண்டும். பெங்களூர் செல்லும் அரசுப்பேருந்தில் சென்று ஓசூர் டிக்கெட் கேட்டால், பெங்களூர் டிக்கெட் வாங்கிக்கொண்டால்தான் பயணிக்கமுடியும் என்றார் கண்டக்டர். பஸ்ஸுக்கு முன்னால் நின்றுகொண்டு, ஓசூர் டிக்கெட் கொடுப்பதுதான் சரி என்று வாதிட்டேன். (இரண்டுக்கும் 40 ரூபாய் வித்தியாசம்) முதலில் சண்டைபோட எத்தனித்தவரிடம், சரி நீங்கள் சொல்லுவதை அப்படியே உங்கள் பெயருடன் சொல்லுங்கள். எனக்கு ஒரு பேட்டி எடுத்த மகிழ்ச்சி கிடைக்கும் என்று பேச்சை பதிவு செய்ய ஆரம்பித்தேன். வாய் மூடிக்கொண்டு ,எங்களுக்கான 3 ஓசூர் டிக்கெட் கொடுத்தார். இதில் மிகக்கொடுமை, ஏற்கனவே 7 ஓசூர் டிக்கெட், பெங்களூர் செல்ல பணம் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்ததுதான்!! "

அனுபவம் 2:
 
 

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

" நம் வாழ்க்கையில் பல நேரங்களில், நாம் தெரிந்தே பலரை நம் பாக்கெட்டுக்குள் கைவிட்டு பணம் எடுத்துக் கொள்வதை  அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு ரூபாயாகவோ, நாலணாவாகவோ சில சமயம் நம் வாழ்க்கையாகவோ கூட இருக்கலாம்.

சமீபத்தில் நானும் என் மகன்களும் பிட்ஸா சாப்பிடுவதற்கு டொமினோ பிஸ்ஸாவுக்கு போனோம். எங்களது ஆர்டருக்கு மொத்தமாய் 303.71 பைசா வரிகளோடு வர, அதை 303.75க்கு முழு இலக்கமாய் மாற்றி, பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் கேட்டதோ 304 ரூபாய். நானும் அது தான் விலையோ என்று பில்லை பார்க்காமல் 304 ரூபாயை கொடுத்தேன். பின்னர் பில்லை பார்த்த போது ஏற்கனவே நான்கு பைசா ரவுண்ட் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருபத்தியைந்து பைசாவை எடுத்துக் கொள்கிறார்களே என்று சுர்ரென கோவம் வந்தது.

“என்ன சார்.. அதிகமா வாங்கியிருக்கீங்க..?”

”சேஞ்ச் இல்லை சார்..”

“நீங்க மாத்தி வச்சிருக்க வேண்டியதுதானே..?”

“நாலனாதானே சார்..”

“சார்.. உங்களுக்கு ஒரு நாலணா.. அது போல ஐம்பது பேரோட நாலணா சேர்ந்தா எவ்வளவு ஆகும் தெரியுமா..?”

சிறிது நேரம் ஏதும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு.. “நாலணாதானே சார்.. ஒரு ரூபாயா தர்றேன் வாங்கிக்கங்க.” என்றான் ஒரு விதமான ஏளனத்தோடு. எதோ நமக்கு அவன் பிச்சை போடுவதை போல,  நான் கொஞ்சம் கூட வெட்கபடவில்லை. என்னிடமிருந்து என் பணத்தை மிகுதியாக பிடுங்க வெட்கப்படாத நீயும், உன் கம்பெனியுமிருப்பதையும் பார்க்கும் போது எனக்கெதுக்கு வெட்கம் என்று நினைத்துக் கொண்டேன்.

”தாராளமா கொடுங்க நான் வாங்கிப்பேன். ஒன்ணு நீங்க சேஞ்ச் வாங்கி வைக்கணும். அப்படியில்லைன்னா.. நீங்க ரவுண்ட் பண்ற அமெளண்ட குறைச்சு 303 ரூபாயா ரவுண்ட் பண்ணனும். உங்க காசு ஒரு ரூபா கூட விட மாட்டீங்க.. ஆனா எங்க காசுன்னா.. அது வெறும் நாலணா தானேன்னு கேட்குறீங்க?.”

அவர் ஏதும் பேசாமல் ஒரு ரூபாயை எடுத்துக் கொடுக்க, என் ஆர்டர் வருவதற்காக காத்திருந்தேன். பக்கத்தில் அவருடய ஆர்டருகாக நின்றிருந்த வயதானவர் “தம்பி.. எனக்கும் நீங்க எக்ஸ்ட்ராவா வாங்கியிருக்கீங்க..?” என்றார். அவரை பார்த்த இன்னும் சிலர்.. என்று ஒரு பத்து பேர் கூடிவிட்டார்கள். அத்துனை பேருக்கும் அவர் சில்லரை மிகுதியாக வாங்கியிருக்கிறார்.

நம்மில் பல பேருக்கு இந்த எண்ணம் இருக்கிறது. எவ்வளவோ செலவு செய்கிறோம். ஒரு நாலணா காசுக்கு போய் தகராறு செய்ய வேண்டுமா..? என்று.. இதை செய்வது தகராறு இல்லை.. உங்கள் உரிமை.. எவ்வளவோ இடங்களில் நம்மை தெரியாமல் ஏமாற்றுகிறார்கள். ஆனால் தெரிந்தே நம்மிடமிருந்து காசை எடுப்பவர்களை நாம் கண்டிக்காமல் விட்டால் அதை போல ஒரு சுரணை கெட்ட விஷயம் வேறேதுமிருப்பதாய் தெரியவில்லை.

இந்த மனோநிலைதான் நம் நாட்டை கொஞ்சம், கொஞ்சமாய் பலவீனப்படுத்தும் மனோநிலையாய் மாறி போகிறது. எதற்கும் நம் எதிர்ப்பை காட்டுவதில்லை. நமக்கெதுக்கு என்றிருப்பது, நான் ஒருத்தன்  கேட்டால் நடந்துடுமா? என்ற எண்ணங்கள். அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று அவர்களை குற்ற்அம் சாட்டுவது எந்தவிதத்தில் ஞாயம்?. நாம் ஒரு சிறு தவறு செய்தாலும் அதை பொது மக்கள் கேட்பார்கள் என்ற பயம் இருந்தால் தானே?. ஸோ.. நண்பர்களே.. Know Your Rights, Act Immediately…. "


அனுபவம் 3:

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

" ஆம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும். அதே பேமில் புட் கோர்ட் ஆரம்பித்திருக்கிறார்கள். சரி சாப்பிடலாமென்று என் நண்பர் போய் ஆர்டர் செய்துவிட்டு வந்தார். புட்கோர்ட் புதியதாய் ஆரம்பித்திருப்பதால் இரண்டொரு கடைகளே இருந்தது. சாப்பாடு வந்த பிறகு போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அவர் போய் தண்ணீர் கேட்டார். தண்ணீரெல்லாம் தரமாட்டோம். வேண்டுமென்றால் பேக்கேஜாக கோக் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது பாட்டில் தண்ணீர்தான் வாங்க வேண்டும் என்று சொன்னார். இது என்ன அநியாயம்?. இவ்வளவு பெரிய  புட்கோர்ட்டில் குடிப்பதற்கு தண்ணீர் தர மாட்டோம் விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி கட்டாயப் படுத்தலாம்?. என்று கேட்ட போது ஊழியர் திரு திருவென முழித்தார்.


நான் உள்ளே நுழைந்து என்ன ஏது என்று கேட்டுவிட்டு, “இதோ பாருங்கள். ஒரு ரெஸ்ட்ராண்ட் என்று வைத்துவிட்டால் நிச்சயமாய் உங்களின் உணவை சாப்பிடுபவர்களுக்கு தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டும். பாடில் தண்ணீரையோ, கோக்கையோ தான் குடித்தாக வேண்டும் என்று கட்டாயபடுத்தக் கூடாது. சட்டப்படி தவறு” என்றேன்.  ஊழியர் அதெல்லாம் எனக்கு தெரியாது, வேணும்னா வாங்கிக்கங்க.. இல்லாட்டி விடுங்க என்றார். அவர் எடுத்தெறிந்து சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. பாதி சாப்பிட்ட அயிட்டங்களை திரும்பக் கொடுத்துவிட்டு எனக்கு சாப்பாடு வேண்டாம். காசை திரும்பக் கொடு என்று கேட்க ஆரம்பித்தேன். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மேலும் விழிக்க ஆரம்பித்தார். உள்ளே போய் மேனேஜர் போன்ற ஒருவரை அழைத்து வர, அவரும்.. தேய்ந்து போன ரெக்கார்டாக அதே பதிலைச் சொல்ல, நானும் தண்ணீர் கொடுத்தால் சாப்பிடுவேன். இல்லை என்றால் சாப்பாடு வேண்டாம் என் காசைக் கொடு என்றேன்.

இப்போது என்னைச் சுற்றி வேடிக்கைப் பார்க்க கூட்டம் சேர்ந்தது. அதற்குள் ஒருவர் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, ஊழியர்கள் சொன்னார்கள். உடனே சார்.. இது புட்கோர்ட் காமன் வாட்டர் வைக்க வேண்டியது நிர்வாகம். அதனால் அவர்களைப் போய் கேளுங்கள். என்றார். எனக்கு உணவு கொடுத்தது உங்களது கடை. சட்டப்படி, ரெஸ்ட்ராரண்ட் விதிகளின் படி, மாநகராட்சியின் விதிமுறைப்படி, ஒவ்வொரு உணவகமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிதண்ணீர், டாய்லெட், வசதி ஆகியவைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது தெரியுமா? அப்படி கொடுக்கமுடியாது என்றால் எனக்கு உங்கள் சாப்பாடு வேண்டாம் என் காசை கொடுங்கள் நான் எனக்கு தண்ணீர் தருபவரிடம் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன். இல்லை நாங்கள் இங்கு தண்ணீர் தர மாட்டோம், பாட்டில் தண்ணீரையோ, அல்லது கோக்கையோதான் விலைக்கு வாங்க வேண்டும் என்று எழுதிக் கொடுங்கள். பிறகு நான் எங்கு போக வேண்டுமோ அங்கு போய் பார்த்துக் கொள்கிறேன் என்றதும்.  அவர் கண் அசைக்க, உள்ளேயிருந்து இரண்டு கிளாஸ் தண்ணீர் வந்தது. இது மாதிரி கே.எப்.சில கேட்டுருவீங்களா? என்றார். என் கூட வா.. இந்தியாவில் எந்த உணவகத்திலும் எனக்கு யார் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள் என்று பார்போம் என்றேன். என் நண்பர் முதலில் கொஞ்சம் நெளிந்தாலும் சாப்பிடும் போது சொன்னார் ‘பரவாயில்லை சார். விடாம கொடுக்க வச்சிட்டீங்களே?” என்றதும் என் கோபம் அவர் மீது பாய்ந்தது.

“என்னா சார்.. இவ்வளவு சண்டை போடுறேன் கூட நீங்களும் கேட்க வேண்டாம். இங்க நம்மள வேடிக்கை பார்த்த ஆளுங்களைப் போலவே நீங்களும் இருந்திட்டீங்க.” என்றதும் தலை குனிந்தார். “நானா பத்து காசு கொடுத்து வாங்கிறது என் உரிமை. ஆனா அவங்க என் பாக்கெட்டுல கை விட்டு காசை எடுத்து இதைத்தான் சாப்பிடணும் சொல்றது அராஜகம்.” என்றதும் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அவர் சாப்பாட்டுக்கு தண்ணீர் கேட்க போனார்.

தியேட்டர்களில் இருக்கும் பெரும்பாலான புட்கோர்டுகளில் இப்படித்தான் கொள்ளையை ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு இன்னொரு விதமான கொள்ளை எப்படியென்றால். தியேட்டருக்குள் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பியை விட அதிகம் விற்கக்கூடாது என்று விதியிருக்கிறது. சமீபத்தில் கூட ஒருவர் இம்மாதிரி மல்ட்டிப்ளெக்ஸில் விற்பதை எதிர்த்து கேஸ் போட்டார். உடனே தில்லாலங்கடிகளாய் ஒரு யோசனை செய்தார்கள். பெரும்பாலான மல்ட்டிப்ளெக்ஸுகளில் பாப்கார்ன் முதற் கொண்டு எல்லா அயிட்டங்களும் அவர்களூடய தயாரிப்பாகவோ, அல்லது வெளியேயிருந்து ப்ராண்டட் பெயரில்லாத தயாரிப்பாகவோ, வரவழைத்து விற்க ஆரம்பித்தார்கள். அதையும் மீறி டின் கோக், பெப்ஸி, வாட்டர் பாட்டில்களில் அதன் ஒரிஜினல் விலை போட்டிருப்பதால் என்ன செய்வது என்று யோசித்த போது பெப்ஸி, கோக் தயாரிப்பாளர்கள் ஒரு வேலையை செய்தார்கள். ஒரு டயட் கோக்கின் விலை வெளியே எம்.ஆர்.பி 25 ரூபாய் என்றால் இங்கே தியேட்டரில் 50 ரூபாய். தண்ணீர் பாட்டில் அறுநூறு எம்.எல் குறைந்தது 20 ரூபாய். தியேட்டரில் விற்க்கப்படும் கோக், பெப்ஸி, தண்ணீர் பாடில்களில் மட்டும் தியேட்டரில் தற்போது விற்கப்படும் விலையை போட்டு, இது வெளியில் விற்பனைக்கல்ல என்பதையும் போட்டு விற்கிறார்கள். கேட்டால் இங்கே இதன் எம்.ஆர்.பி. இதுதான் என்று சொல்கிறார்கள்.

இதைப் படிக்கும் வாசகர்களே.. உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நிச்சயம் உங்களுக்கும் இம்மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்ன செய்வது என்று மனதிற்குள் புழுங்கியபடி காசைக் கொடுத்து வாங்கியிருப்பீர்கள். இனி தயவு செய்து அம்மாதிரி இல்லாமல் உங்கள் உரிமைகளை கேட்டு வாங்குங்கள்.  நீங்கள் கேட்பது நீங்கள் உழைத்து சம்பாதித்த காசுக்காக, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைக்காதீர்கள். மற்றவர்களுக்காக நாம் வாழ்வதில்லை. கேட்டால் நிச்சயம் கிடைக்கும். "

**************************************************


Sunday, August 14, 2011

மற்றவை - இதயம் கவர்ந்தவை

          * இதயம் கவர்ந்தவை *
மிழ் சினிமாவின் வரலாறைப் பற்றி நிறைய பேர் நிறைய விசயங்களைச் சொல்லிருக்கின்றனர். டி.ஆர்.மகாலிங்கம் காலத்திய படங்களில் எல்லாம் பாடல்கள் அதிகம் இருக்கும். கதாநாயகன், கதாநாயகியை நினைக்கும் போது ஒரு பாட்டு வரும்.அப்புறம் அவளைப் பார்க்கச் செல்லும் போது ஒரு பாட்டு வரும்.பார்த்த பின் இருவருக்கும் சேர்ந்து ஒரு டூயட் பாட்டு வரும். இது அப்போதைய டிரெண்ட். காலம் மாற மாற படத்தின் நீளமும், பாடல்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இப்போதெல்லாம் ஆறு பாடல்கள் ஒரு படத்தில் காட்டினாலே நம்மை அறியாமல் படத்தின் மீது ஒரு சலிப்பு வந்து விடுகிறது. ஆடியோ ரிலீஸுக்காக மட்டும் ஆறு பாடல்களை வெளியிட்டு, படத்தில் ஒரு சிலவற்றை கட் பண்ணி விடுகின்றனர்.

இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படங்களில் கிடைக்கும் ஆனந்தம், எண்டெர்டெயின்மெயிண்ட் இப்போதெல்லாம் வெறும் இருபது நிமிடங்களில் வரும் சார்ட் ஃபில்ம் எனப்படும் குறும்படங்களில் கிடைத்துவிடுகிறது. ஃபேஸ்புக்கை ஓப்பன் பண்ணினால் ஒரு நாளுக்கு அட்லீஸ்ட் ஒரு குறும் படமாவது நமது நண்பர்கள் மூலம் பகிர்ந்து கொண்டு, காணும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் எனக்கும் நிறைய படங்கள் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

 சில படங்கள் மொக்கையாக இருக்கும். சில அட போட வைக்கும். சில பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும். காதல் பற்றிய குறும் படங்கள் காணும் போது நிறைய தடவை படத்தோடு லயித்திருக்கிறேன். படத்தை எடுப்பவர்கள் இளைஞர்கள் அல்லது இளைஞிகளாக இருப்பதால் காதல் பற்றிய குறும் படங்கள், ரசிக்கும் வகையில் அமைகிறது என்று நான் நினைக்கிறேன்.

சமீபத்தில் நண்பர் ஒருவர் அனுப்பிய "மாலை நேரம்" இந்த குறும்படம் என்னை மிகவும் கவர்ந்தது. இதுவும் ஒரு காதல் கதைதான். இந்தப் படத்தில் வரும் ஹீரோ , ஹீரோயின் இருவரும் அவ்வளவு இயல்பாக நடித்திருகின்றனர். இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்தது படத்தின் ஹீரோயின். குட்டிப் பெண் தான். ஆனால் நடிப்பில் சுட்டிப் பெண். நீங்களும் பாருங்கள். அவசரகதியில் பார்க்க வேண்டாம். ஓய்வு நேரத்தில் நிதானமாக பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.


#####################################################

கிரெடிட் கார்டு என்ற ஒரு டாபிக்கை வைத்துக் கொண்டு எடுத்திருக்கும் "தேய் மச்சி தேய்" இந்த குறும்படம் டாக்குமெண்டரி போல இல்லாமல், சிறப்பான மேக்கிங்கால் ரசிக்கும் படி எடுத்திருக்கிறார்கள். இதுவும் உங்கள் பார்வைக்கு.



*****************************************************

Friday, August 12, 2011

எ.பி.க - 12 - விலைமதிப்பில்லா மாது

               * விலை(மதிப்பில்லா) மாது(18+) *

த்தனையோ கவிதைகளை நான் நித்தமும் படித்து வருகிறேன். காதல், கோபம், சமூகம், வெறுப்பு இன்னும் நிறைய வகையறாக்களில் வெளி வந்த கவிதைகள் நிறைய என்னக் கவர்ந்திருக்கின்றன. வாழ்க்கையின் நிதர்சனமான ஒரு நிகழ்வை தன் ஷார்ப்பான வார்த்தைகளில் நெற்றிப் பொட்டில் தட்டியது போல ஒருவர் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார். எழுதியவர் பெயர் தெரியவில்லை. இருப்பினும் என்னை மிகவும் கவர்ந்த இந்தக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு படைப்பாளிக்கும் ஒரு விலைமாதுக்கும் நடக்கும் உரையாடலை மிக மிக நாஷுக்காகவும் நயமாகவும் சொல்லியிருக்கிறார். இதில் காமமும் கலந்திருப்பதால் 18+ போட்டு விடுகிறேன். படித்துப் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.

விலைமதிப்பில்லா மாது



தொலைக்காட்சி,குளிரரூட்டி,நாற்காலி,கணினி
என எல்லாமிருந்த அறையில் அவர்களுக்கு
கட்டில் மட்டுமே தேவைப்பட்டது....

அவன் முயன்று முன்னேற
அவள் முனங்கிப் பின்வாங்கினாள்..

மனிதஇனத்தின் மகரந்த சேர்க்கை அங்கே
நடந்துகொண்டிருக்கிறது...
யார் பூ யார் வண்டு ஆராய்தல்
அவசியம் இல்லை..

ஆதாம் கண்டுபிடித்த ஆட்டம்
நிறைவு பெற்றது.
இளைத்துக் கலைத்தனர்- வியர்வை
முத்துக்கள் உடல் முழுக்க கோலம் போட்டது.

அவன் கலைமகன்.
அவள் விலைமகள்..

கற்பனையை பேனாவுக்குள் ஊற்றி
காட்சிகள் படைப்பவன் அவன்.
தன் உடலை பொதுவுடைமை
ஆக்கியவள் அவள்..

நாற்பதை தொட்டவன் அவன்.
இலக்கியம் இறுமாப்பு இரண்டும்
இரு கண்கள் அவனுக்கு...
குடும்பம்,பொறுப்பு போன்ற
இமைகள் கிடையாது..

பட்டினத்தாரையும் காதல் பாட்டு எழுத
வைக்கும் அழகு அவளது..
இந்த அவசர உலகம் கொடுத்த
"ஒரு மணி நேர மனைவி"- இவள்.
 

ஜன்னல்களை திறந்தான். வானத்தை ஆராய்ந்தான்..
பேனா புத்தி அது
நிலவு நட்சத்திரங்கள் ஏதுமின்றி வானமும்
நிர்வாணமாய் இருந்தது......

புகைக்க தொடங்கினான்.
அவள் கோபம் கொண்டாள்.
கூடிய பின் புகைப்பது
அவனது நெடுநாள் பந்தம்.
ஆனால் புகைக்கக்கூடாதென்பது அவர்கள்
முன்னமே செய்த ஒப்பந்தம்!!!

அவனை ஏசினாள்.
காற்றை கற்பழிக்காதே என்றாள்.
அவனுக்கு கோபம் பற்றியது.
"வேசை தானே நீ... பலர் தொடும் பரத்தைக்கு திமிறென்ன??"
தீப்பிழம்பை கக்கினான்.
அவளோ எரிமலையானாள்.

அவள் கண்கள் சிவப்பானது.
அவனை ஏறிட்டு அற்பமாய் பார்த்தாள்.
"ஆம்.வேசை தான் நான்.." என
ஆரம்பித்து தொடர்ந்தாள்.

என்னிடம் வறுமைக்கதைகள் இல்லை.
நியாயப்படுத்தும் காரணங்கள் இல்லை.
உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...

துணை இழந்த வயதானவனின் வடிகால் நான்...
எங்கோ நடக்க இருக்கும் பாலியல் குற்றத்தைத்தடுக்கிறேன்...
உண்மையில் மிருகங்களின் காமங்களைந்து
மீண்டும் நாங்கள் தான் மனிதர்களாக்கி அனுப்புகிறோம்.
நாங்களில்லையேல் உன் சமுதாயம்
நாறி நாற்றமடிக்கும்....

இதுவும் ஒரு வியாபாரமே ....
ஏமாற்றில்லா...ஊழலில்லா... வியாபாரம்.
நீ அசைவம் கொலை என ஒத்துக்கொள்
நான் விபச்சாரம் தவறென ஏற்றுக்கொள்கிறேன்.

கற்பிழப்பவர் வேசை என்பது உன் சித்தாந்தமெனில்
நீயும் ஒரு வே
சி தானே......

"வேசி" பெண்பால் என
எவன் சொன்னது??...

அவனருகே வந்து தாழ்ந்த குரலில்
மீண்டும் சொன்னாள்....

"உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...."

பேசிவிட்டு அறையிலிருந்து
விடைபெற்றாள்....

அவன் கண்ணிமைக்காமல் அவள்
சென்ற திசை நோக்கிக்கொண்டிருந்தான்.

தாளில் அடுத்த நாவலுக்குத் தலைப்பிட்டான்.
விலை(மதிப்பில்லா) மாது!!!!!!!!!!


*********************************************