Sunday, December 11, 2011

மற்றவை - நான்கு விசயங்கள்

                      ** நான்கு  விசயங்கள்  **

கனிமொழி ஜாமீன்:



ற்கனவே எனது பதிவில்  சொல்லியிருந்தது போலவே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. எதோ விடுதலை கிடைத்துவிட்டது போல அவரது கட்சியினர் செய்த வரவேற்புக்கு அளவேயில்லை. விமான நிலையத்திலிருந்து வீடு வரை கனிமொழிக்கு அப்படி ஒரு வரவேற்பு அலப்பறைகள் செய்திருந்தனர். (அவர் ஏதோ நாட்டிற்கு நன்மை செய்தது போல!!!) மக்களின் பணத்தை கொள்ளையடித்து விட்டு, இப்போது ஜாமீனில் வெளி வந்த கனிமொழி தனது பேட்டியில் இனிமேல் தான் அதிரடி அரசியல் செய்யப்போவதாக சொல்லியிருந்தார்.ஆறு மாத சிறை வாழ்க்கையால், அவரது தாயார் , தன் மகளுக்கு கட்சியில் பெரிய பதவி தர வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார். அதற்கு கலைஞர் குடும்பத்தில் உள்ள சிலர் எதிர்த்து வருகின்றனர். எனக்கென்னவோ கனிமொழி பேசாமல்  தனது இலக்கிய வாழ்க்கைக்கு செல்வது நல்லது என்று நினைக்கிறேன். பார்க்கலாம்... அவரின் அடுத்த மூவ்மெண்டை..

முல்லைப் பெரியாறு அணை:


பூதாகரமான பிரச்சனை ஆகிவிட்டது முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை. கேரளா அரசு தனது சைடில் சில விசயங்களை மக்களின் முன் வைத்து  புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறதாகவும், அது உடைந்தால் , அணையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, சுனாமியை விட பேராபத்து ஏற்படும். அதனால் இலட்சணக்கணக்கில் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படும் என்று பீதியைக் கிளப்பி விடுகின்றது. அது உடைந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைதான் "டேம்999" என்ற படம் வேறு பயங்கரமாகக் காட்டியிருப்பதாக சொல்லுகின்றனர். ஒரு வேளை இப்படியும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் கேரள மக்கள் உள்ளனர். இது இப்படி இருக்கையில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள், அணையைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து அரசுக்கு ரிப்போர்ட் தந்திருக்கின்றனர். அதில் 1886ம் ஆண்டு இந்த அணையை சுண்ணாம்பு மற்றும் சிமெண்டு கொண்டு கட்டியிருப்பதாகவும், இது ஒரு புவியீர்ப்பு விசையினால் செயல்படும் அணையென்றும் சொல்லியிருக்கின்றனர். மேலும் அணையின் பாதுகாப்பிற்காக குறுகியகால பாதுகாப்பு திட்டம் மற்றும் நீண்ட கால பாதுகாப்பு திட்டம் என்ற  வகையில் அணையைச் சுற்றி பாதுகாப்பிற்காக என்னென்ன செய்திருக்கின்றனர் என்றெல்லாம் தெளிவாக சொல்லியிருக்கின்றனர். தேவையான பாதுகாப்பில்தான் அணை உள்ளது, அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற முடிவையும் அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர்.

எப்படியாவது இடுக்கி அணையின் தண்ணீர் வரத்தைப் பெருக்கி கொண்டு, தனது மாநிலத்திற்கு பயன்தரும் வகையில் கேரள அரசு செயல்படுவதாக சுற்றியுள்ள மக்கள் அம்மாநில அரசை குறை சொல்கின்றனர். புதிய அணை கட்டினால் நிச்சயம் கம்பம், தேனி மற்றும் பெரியாறு அணையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு தேவையான தண்ணீரை கேரள அரசு தராது எனவும் இதனால் வேளாண்மையை நம்பியுள்ள பல இலட்சம் குடும்பங்கள் வறுமை நிலைக்குச் செல்ல வேண்டிவரும் என்று அப்பகுதி மக்கள் எண்ணிக் கொண்டு தங்கள் நலத்திற்காக போராடிக் கொண்டு இருக்கின்றனர். மத்திய அரசு இதுநாள் வரை வேடிக்கைப் பார்த்து கொண்டுதான் இருக்கின்றது. மத்திய அரசு தலையிட்டு இப்பிரச்சனையை தீர்த்து வைத்தால் இரு மாநில சகோதர சகோதரிகளுக்கும் இருக்கும் நட்புறவிற்கு பங்கம் ஏற்படாது. இந்தப் போராட்டமும் ஒரு முடிவுக்கு வரும்.

மீண்டும் உண்ணாவிரதம்-அன்னா:

வயசான இந்தப் பெரியவர் சும்மாவே இருக்க மாட்டேங்கிறார். ஏதாவது குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் என்று காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் நினைத்துக் கொண்டு இருப்பர். லோக்பால் மசோதாவுக்காக நீண்ட காலமாக போராடி வரும் அன்னா ஹசாரேவிற்கு காங்கிரஸ் அரசு இன்னமும் பூச்சாண்டி காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு வேளை அன்னாவுடன் அனைத்து மக்களும் சேர்ந்து போராடினால் மசோதா தாக்கல் செய்யப்படலாம். இனி வரும் தேர்தல் காலத்தில் காங்கிரஸுக்கு நிச்சயம் பேரிடிகள் காத்துக்கொண்டிருக்கின்றன. மக்களின் நன்மைக்கு சில விசயங்கள் செய்தால் அவர்களுக்கு நல்லது.

காமெடி பேட்டி:

ஒஸ்தி படத்திற்கான சன் டிவியில் நிகழ்ந்த நேற்றைய பேட்டியைக் காண சந்தர்ப்பம் கிடைத்தது. படத்தில் வரும் காட்சிகளைப் போலவே பேட்டியின் போது அலப்பறைகள் செய்தனர். அதிலும் தரணியின் அலப்பறைக்கு அளவேயில்லை. போதாக்குறைக்கு டி.ராஜேந்தரையும் பேட்டிக்கு அழைத்திருந்தனர். ஏண்டா அழைத்தோம் என்று தரணி நினைக்கும் அளவிற்கு டி.ஆரின். தம்பட்டம் தாண்டவாமாடியது. எது எப்படியோ , டி.ஆரின் தாண்டவத்தைப் பார்த்து நிகழ்ச்சி முடியும் வரை வந்த சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. சூப்பர் காமெடி.

*******************************************************

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

RAMA RAVI (RAMVI) said...

நல்ல அலசல்.பகிர்வுக்கு நன்றி, குணா.

ADMIN said...

குட்

N.H. Narasimma Prasad said...

அருமையான பதிவு நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...