Saturday, December 10, 2011

மற்றவை: ஒஸ்தி - விமர்சனம்

             **  ஒஸ்தி - விமர்சனம்  **


விண்ணைத்தாண்டி வருவாயாவில் அலட்டல் இல்லாத நடிப்பில் கவர்ந்த STR என்ற சிம்பு, வானம் படத்திலும் அதே போல் அமைதியாக நடித்ததால் நல்ல பெயரை அவருக்கு பெற்று தந்தது. இந்தப் படம் ஒஸ்தியும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தருமா?தொடர்ந்து படியுங்கள்.

ஹிந்தியின் தபாங்க் படத்தை ரீமேக் ஆக்கியிருக்கிறார்கள். திருநெல்வேலியில் இருக்கும் காட்டுப்பாக்கம் என்ற ஊரின் மாஸ் இன்ஸ்பெக்டர்தான் சிம்பு. கான்ஸ்டபிள்களுக்கும்,கலெக்டர்,கமிஷ்னர் மற்றும் ரவுடிகளுக்கும் சிம்புதான் மாஸ். சிம்புவைக் கண்டாலே பயம். அப்படி இருக்கையில் தேர்தலில் ஜெயிப்பதற்காக மக்களுக்கு கொடுக்கவிருக்கும் அரசியல்வாதியான வில்லன் சோனுவின் பணத்தை சிம்பு கைப்பற்றிக் கொள்கிறார். அதனால் சோனுவுக்கும் சிம்புவுக்கும் பகை. இதில் யார் ஜெயித்தார்கள்?வெண் திரையில் பார்க்க..!


சிம்புவின் நடிப்பு:

நெல்லை ஸ்லாங்,பாடி லாங்குவேஜ், டயலாக் மாடுலேஷன் என நிறைய வித்தியாசம் காட்டியிருக்கிறார் சிம்பு. க்ளைமாக்சில் சிக்ஸ் பேக் வேறு காட்ட முயன்றிருக்கிறார். இத்தனை உழைப்புக்கள் இருந்தும் மீசையில்லாத அவரது முகத்தைப் பார்க்கும் போது சின்ன பையன் போலத்தான் நினைக்கத் தோன்றுகிறது. அதனால் சிம்பு செய்யும் அத்தனை மாஸ் வேலைகள், பன்ச் டயலாக் போன்றவற்றை ஏற்க முடியவில்லை. அதுதான் படத்தின் பெரிய மைனஸ். மெச்சூர்டான ரோல்களை செய்வதற்க்கு இன்னும் சிறிது வருடங்கள்  பொறுத்திருந்தால் சிம்புவுக்கு நல்லது. மற்றபடி சிம்பு, ரிச்சா தொடர்பான காட்சிகள் இதம்.



அவ்வப்போது கான்ஸ்டபிள் சந்தானத்தின் காமெடியால் முதல் பாதி படம் கொஞ்சம் நன்றாகப் போகிறது. பிற்பாதியில் சிவாஜி த பாஸ், ஒஸ்தி த மாஸ் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு சிம்பு அலப்பறை செய்வதால் வேறு வழியில்லாமல் படம் முடியும் வரை பார்க்கத்தான் வேண்டும்.


ரிச்சா நடிப்பு:
"மயக்கம் என்ன"-வில் அருமையான நடிப்பில் கவர்ந்த ரிச்சாவுக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கு காட்சிகளே இல்லை. டயலாக்ஸ் ரொம்பக் குறைவு. ஒட்டியானம் அணிந்து கொண்டு இடையையும்,  பரந்த முதுகையும் காட்டியபடி வந்து சிம்புவை கவர்கிறார். நம்மையும் கிளாமர் கெட்டப்பில் கவர்கிறார். திருமணத்திற்கு  அப்புறம் வரும் ஒரு காட்சியில் சிம்புவிடம் "ஒஸ்தி வேலன்னா யாரு..உங்க பேரு காவல்துறைதானே?" என்று கேட்கும் போது திடீர் சிரிப்பை வரவழைக்கிறார்.


இயக்குனர் திறமை:
படத்தை நெல்லை களத்திற்கு கொண்டு சென்றதற்கு இயக்குனரைப் பாராட்டலாம். படத்தில் எல்லா வசனங்களையும் சிம்புவுக்கு கொடுத்துவிட்டாரா? சிம்பு வரும் அனைத்து காட்சிகளிலும் அவர் மட்டும்தான் வசன மழை பொழிகிறார். கொஞ்சம் குறைத்திருக்கலாம். தாங்க முடியவில்லை. மற்றபடி  தில், தூள், கில்லி படங்களில் வரும் விறு விறுப்பு இதில் மிஸ்ஸிங்க்.

இசை:
தமனின் இசையில் "நெடுவாழி" பாடலும் பாடலுக்கேற்ற நடன அமைப்பும் நன்றாக உள்ளது. சிம்புவின் நடனம் சிறப்பாக உள்ளது. பிண்ணனி இசையில்
படம் முழுக்க ஹே..ஏய்..ஒஸ்தி மாமு என்று சொல்லிக் கொண்டு இரைச்சலோடு அமைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவு ஓ.கே. சந்தானத்தின் காமெடி சில காட்சிகள் ஒ.கே.மற்றவை சுமார். வி.டி.வி. கணேஷ் நடிப்பு சுமார். சண்டைக் காட்சிகள் மசாலா பிரியர்களுக்குப் பிடிக்கும். வில்லன் , நாசர், ரேவதி நடிப்பு ஒ.கே. ஜித்தன் ரமேஷ் பாவம். சரண்யா மோகன் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்.

ஒஸ்தி - ஓவர் அலப்பறையில் நாஸ்தியான படம்.

*******************************************************

4 comments:

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் அருமை நண்பரே. பகிர்தலுக்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல விமர்சனம்,குணா.பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனம் அருமை நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

Ashok said...

Thats y u slept in 2nd half .......
Eventhough, great comments

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...